சென்னை, டிச. 4- வடகிழக்கு பருவமழையால் தமிழகத் தில் உள்ள 14 அணைகள் முழு கொள்ளள வான நூறு சதவீதத்தை எட்டியுள்ளதாக பொதுப் பணித்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளில் 14 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது. மேட்டூர் அணை, வரட்டுப்பள்ளம், பவானிசாகர், சோத்துப்பாறை, மாபழத் துறையாறு உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. எஞ்சியுள்ள அணைகளில் பெரும்பாலானவை 90 சத வீதம் நிரம்பியுள்ளதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.