tamilnadu

img

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு

தனித்தேர்வர் நுழைவுச்சீட்டு  பிப்.25-இல் ஆன்லைனில் வெளியீடு

சென்னை, பிப்.22- தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழு தும் தனித்தேர்வர்கள் தங்களுக் கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை இணையதளத்தில் செவ்வாய்க் கிழமை பதிவிறக்கம் செய்து கொள் ளலாம். இதுகுறித்து தேர்வுத்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்தி வருமாறு: தமிழகத்தில் மாநில பாடத்திட் டத்தில் வரும் மார்ச் மாதம் நடை பெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உள்பட) பிப்.25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழை வுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிப்.26-இல் செய்முறைத் தேர்வு கள்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர் வுக்கான அறிவியல் பாட செய் முறைத் தேர்வுகள் பிப்.26-ஆம் தேதி புதன்கிழமை முதல் பிப்.28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை அறி வியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளி லேயே நடைபெறவுள்ளன. அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவ ரத்தை தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொதுத்தேர்வுக்கான கால அட்ட வணை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது என அதில் கூறப்பட் டுள்ளது.

;