tamilnadu

img

பிரசாந்த் கிஷோர் மீது மோசடி குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு

பாட்னா:
பாஜக, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில்  வியூகம் வகுப்பவர் என்ற பெயரில் ஒப்பந்தம் போட்டு வேலைபார்த்த பிரசாந்த் கிஷோர் மீது மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாஸ்வத் கவுதம் என்பவர் மோதிகாரி காவல்நிலையத்தில் பிரசாந்த் கிஷோர் மீது புகார் அளித்துள்ளார். அதில், பாத் பீகார் கி என்னும் பெயரிலான தன்னுடைய கருத்துருவைப் பிரசாந்த் கிஷோர் திருடிப் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஏமாற்றுதல், நம்பிக்கைத் துரோகம் செய்தல் ஆகிய பிரிவுகளில் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாத் பீகார் கி என்பது பீகாரை நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதற்காகப் பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

;