புதுச்சேரி,ஆக.28- புதுச்சேரி மாநில சட்டப்பேரவை யின் பட்ஜெட் கூட்டம் புதனன்று (ஆக.28) காலை 9.30 மணிக்கு துவங்கியது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான பட் ஜெட்டை நிதி பொறுப்பை வகிக்கும் முதல்வர் நாராயணசாமி ரூ.8425 கோடிக்கு தாக்கல் செய்தார். முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கி யதும், பேரவைத் தலைவர் சிவ கொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலை யில் அவர் பேரவையை நடத்தக் கூடாது என்றும், முதலமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட் மக்களை ஏமாற்றும் வெற்று பட்ஜெட் என்றும் குற்றம் சாட்டிய என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களை ஒட்டுமொத்த மாக பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். கண்டன கோஷங் களையும் எழுப்பினர்.
பேரவையின் மாண்பை கெடுக்கும் வகையில் செயல்பட்ட எதிர்க்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களை பேரவையி லிருந்து வெளியேற்றுமாறு சபைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக பேரவையிலிருந்து சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.
மானியம் அதிகரிப்பு
அதனைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி வாசித்த பட்ஜெட் உரையில், புதுச்சேரியில் நிதி நிலை மை சீராக உள்ளதாக மத்திய அரசு பாராட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வேளாண்துறை மூலம் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டு ள்ளது. இதன் மூலம் 16.15 கோடி கூடுதல் செலவாகும். விவசாயிகளுக்கான காப்பீட்டு திட்டம் மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான ஏற்றுமதி கொள்கை விரைவில் அமல்படுத்தப் படும்.
தற்காப்பு பயிற்சி
குளிரூட்டும் பால் பதனீட்டு ஆலைகள் மூன்று அமைக்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவி கள் தங்களை தற்காத்துக் கொள்ள தற்காப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப் படும். அனைத்து அரசு பள்ளிகளில் மகிழ்ச்சி பாடத்திட்டம் அமல்படுத்தப் படும்.
நிவாரணம் உயர்வு
புதுச்சேரி மாநிலத்தில் பத்து நவீன கைப்பந்து விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும். நான்கு பல்நோக்கு விளையாட்டு மையங்கள் அமைக்கப் படும். ரூ. 11 கோடியில் இரண்டு அருங் காட்சியகம் அமைக்கப்படும். காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத் திற்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்யப் படும். 61 நாட்கள் மீன்பிடித் தடைக் காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ. 5,500-லிருந்து 6,500ஆக உயர்த்தப் படுகிறது. மழைக்கால நிவாரணம் ரூ. 2,500 லிருந்து 3000 ஆக உயர்த்தப்படு கிறது. சாலை விபத்தில் காயமடைந்த வர்களை காப்பாற்றி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் நபருக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
தொகுதி மேம்பாட்டுக்கு ரூ. 1 கோடி
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 1 கோடி ரூபாயி லிருந்து 2 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது. முதல்வர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மீதும் விவாதமும் அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கைகள், தனி நபர் தீர்மான ங்களும் நிறைவேற்றப்பட உள்ளது. இக்கூட்டத் தொடர் மொத்தம் 11 நாட்கள் கூட்டம் நடைபெறுகிறது.