tamilnadu

img

புதிய பொறுப்பு: நவ்ஜோத் சித்து  ஏற்க மறுப்பு

சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையே, அண்மையில் அமைச்சரவையை மாற்றியமைத்த அம்ரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையை ஒதுக்கினார். ஆனால், இதில் அதிருப்தியடைந்த சித்து, காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து முறையிட்டார். எனினும் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை. தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் சமரசம் செய்து வருகிறார்.