நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 வயது சிறுவன் உள்பட 6 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
நேபாளத்தின் குல்மி மாவட்டத்தில் லிம்கா மற்றும் துலோ லும்பெக் பகுதிகளில் கனமழையை அடுத்து நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் துலோ லும்பெக் பகுதியில் பல வீடுகள் புதைந்து போயின. இந்த சம்பவத்தில் தர்சன் தரமு (வயது 7) என்ற சிறுவன் மற்றும் தில் குமாரி (வயது 31) என்ற பெண்ணும் மண்ணில் புதைந்து பலியாகி உள்ளனர்; பலர் காயமடைந்தனர். இதேபோன்று லிம்கா பகுதியில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 5 பேர் மாயமாகி உள்ளனர்.
இதை அடுத்து மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தில் நேபாள ராணுவம் மற்றும் காவல்துறை நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் ஆய்வாளர் குல்மி ரவீந்திர கட்கா தெரிவித்துள்ளார்.