இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு நிறைவையொட்டி, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட மாமேதை ஏங்கல்ஸ் எழுதிய ‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’ என்ற நூலை தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்குவரத்து அரங்கம் சார்பில் 10ஆயிரம் பிரதிகள், போக்குவரத்து தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட்டு வாசிக்கும் இயக்கம் நடைபெறுகிறது. இதையொட்டி எட்டு மண்டலங்களில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருநெல்வேலியில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றவர்கள், அங்கு அமைந்துள்ள மாமேதை லெனின் சிலைக்கு செவ்வணக்கம் செலுத்தினர். (செய்தி 3)