நெல்லை மாவட்டத்தில் அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
நெல்லை மாவட்டத்தில் முதல் கட்டமாக நெல்லை, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 12 கிராமங்களுக்கு முதல் கட்டமாக டோக்கன் வழங்கும் பணி அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.