பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் பொங்கல் பரிசுதொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் இந்த ஆண்டுக்கான பொங்கலை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 பணமும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் பொதுமக்கள் நியாயவிலைக்கடை கடைகளுக்குச் சென்று பொருட்கள் மற்றும் ரூ.1000 பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளைச் சிறப்பாகப் பொதுமக்கள் கொண்டாட அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து இதர குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக நியாயவிலை கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னர் வரும் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.