நெல்லை,டிசம்பர்.19- கேரள மருத்துவக்கழிவுகளை நெல்லையில் கொட்டிய 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக்கழிவுகள் நீண்ட நாட்களாக நெல்லையில் கொட்டப்பட்டுவருகிறது. இதனால் பாதிப்படைந்த மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில் நெல்லையில் கொட்டப்பட்ட கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லாவிட்டால் குப்பை மேலாண்மை நிறுவனத்திடம் கேரள அரசே ஒப்படைக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்துள்ளது.
தற்போது முக்கிய ஏஜண்டுகலாக செயல்பட்ட நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த மனோகர், மாயாண்டி ஆகியோரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.