பயிர்களைச் சேதப்படுத்திய என்.எல்.சி நிறுவனம், ஒரு ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது சுரங்க விரிவாக்கத்துக்கான வாய்க்கால் அமைக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜூலை 30 ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.
அப்போது விளைநிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்கள் அழிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. வன்முறை தொடர்பாக 28 போ் கைது.
இந்நிலையில் பயிர்களைச் சேதப்படுத்திய என்.எல்.சி நிறுவனம், ஒரு ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க வேண்டும் அதுவும் இந்த இழப்பீட்டை ஞாயிற்றுக்கிழமைக்குள் வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
கையகப்படுத்திய நிலம் என்.எல்.சி பயன்படுத்த சில காலமாகும் என விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அந்நிலத்தில் விவசாயிகள் பயிரிட்டதும் தவறு;இதற்கு இருவரும் 50:50 பொறுப்பாவார்கள் என்று நீதிபதி கூறினார்.
நில உரிமையாளர்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தைப் பாதுகாக்க என்.எல்.சி தவறவிட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இனி எந்த விவசாயப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது. அதுமட்டுமின்றி நில உரிமையாளர்கள் சட்ட ஒழுங்கை பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது என்று நீதிபதி கூறினார்.