tamilnadu

img

உதகை மார்கெட்டில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்

உதகை, அக் 24 - உதகை தினசரி மார்க்கெட் கீழ்கேட் பகுதியில் தனியார் வாகனங்கள் அதிகம் நிறுத்துவதால் சரக்கு வாகனங்கள் உள்ளே வரமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டம், உதகை தினசரி மார்க் கெட்டிற்கு தினந்தோறும் காரமடை, மேட் டுப்பாளையம், குண்டல்பெட் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வாகனங்கள்  வந்து செல்லும். இங்கு, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட் களை இறக்குவதற்கு ஒரு இடமும், காய்க றிகளை இறக்குவதற்கு ஒரு இடமும், இறைச் சிகளை இறக்குவதற்கு ஒரு இடம் என தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காய்கறிகளை இறக்கு வதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தனியார் வாகனங்கள் அதிகம் நிறுத்தப்படுவதால் சரக்கு ஏற்றி வரும் லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் உள்ளே செல்ல முடி யாமல் நிற்பதால் இப்பகுதியில் பெரும்  வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே,  நகராட்சி நிர்வாகம் தனியார் வாகனங்களை  உள்ளே நிறுத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று காய்கறி சரக்குகளை ஏற்றி வரும்  வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுக்கின் றனர்.