tamilnadu

நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்கிடுக தற்காலிக வனக்காவலர்கள் கோரிக்கை

உதகை, அக். 26 - கூடலூர் வனக்கோட்டத்தில் பணிபுரியும் யானை விரட் டும் தற்காலிக வனக்காவலர்கள், தீபாவளிக்கு முன்பா கவே நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட தற்காலிக வேட்டை தடுப்பு காவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த நான்கு மாதங்க ளாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், இவர் கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலை யில், தீபாவளி பண்டிகையும் நெருங்கி வருவதால், அதற்கு முன்பாகவே நிலுவையில் உள்ள சம்பள பணத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.