tamilnadu

img

செயல்படாத வங்கி ஏடிஎம்-க்கு கண்ணீர் அஞ்சலி வாலிபர் சங்கம் போராட்டம்

உதகை, அக்.5- பந்தலூரில் ஒரு மாதத்திற்கும் மேலாக செயல்படாத ஏடிஎம் இயந்திரத்திற்கு  கண்ணீர் அஞ்சலி செலுத்தி வாலி பர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூரில் உள்ள அரசு மருத்துவ மனை கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும்.போதுமான மருத் துவர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஆக்சி ஜன் சிலிண்டர், எக்ஸ்ரே, சிடிசி ஸ்கேன் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகள் மற்றும் குடும்பத்தினருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் அதிகாரி கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  ஒரு மாதத்திற்கும் மேலாக செயல்படாமல் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தை செயல்படுத்திட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

புதிதாக தேசியமயமாக்கப்பட்ட வங் கியை பந்தலூரில் துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் திங்களன்று பந்தலூரில் ஆர்ப் ்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் நெல்லி யாளம் நகர கமிட்டி செயலாளர் ஹூனைஸ் பாவா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சி.மணிகண்டன், மாவட்டக்குழு உறுப்பினர் பாபு பாரிஸ், அஸ்வின், சஜிர், கூடலூர் இடைக்கமிட்டி செயலாளர் பிரபு, தோட்டத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.ரமேஷ், தையல் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாபுட்டி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழுக்கங்களை எழுப்பினர்.