உதகை, ஆக.24- கேத்தி பேரூராட்சியில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் விற்பனைக்காக மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப் பட்டு வருகின்றன. உதகை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெய்த கன மழையைத் தொடர்ந்து தற் போது விவசாய நிலங்கள் மீண்டும் நடவுக் காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இயற்கை உரங்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதை யடுத்து கேத்தி பேரூராட்சி அலுவல கத்தில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் விற்பனைக்காக மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்க ப்படுகின்றன. தரமான உர உற்பத்தியை கேத்தி பேரூராட்சி நிர்வாகம் உறுதி செய்த பின்னரே அவை விற்பனைக்காக அனுப்பப் படுவது குறிப்பிடத்தக்கதாகும்.