உதகை, நவ.15 - உதகை வேல்வியூ லீஸ் சாலையில் வழிந்தோடும் கழுவு நீரை அகற்றி தரமான சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை வேல்வியூ லீஸ் பகுதியில் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கிளேண்ட் ராப் செல்லும் சாலையில் பல மாத மாக வழிந்தோடி வருகிறது.இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இந்த சாலை யில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ள தால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் கழிவுநீர் வழி வதை தடுக்கவும், சாலையை செப்பனிட வும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.