உதகை, ஆக. 3 – உதகையில் குடியிருக்க மாற்று இடம் கேட்டு பொதுமக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், உதகையில் தாழ்த் தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் காந்தல் பகுதி யில் பெரும்பான்மையான மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் மாதம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வாடகை கொடுத்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று பொது முடக்கத்தால் வேலையிழந்த இம்மக்கள், அன்றாடத் தேவைகளுக்கே பிறரிடம் கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில், வீட்டு உரிமையாளர்கள் தொடர்ந்து வீட்டு வாடகை தரச் சொல்லி நிர்பந்தம் செய்வதுடன் வாடகை கொடுக்கா விட்டால் வீடுகளை காலி செய்திடச் சொல்லி மிரட்டி வருகிறார். ஆகவே தங்களுக்கு குடியிருக்க மாற்று இடம் கேட்டு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர்.