tamilnadu

img

பதவி உயர்வு கலந்தாய்வை  உடனே நடத்திடுக கிராம சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு

உதகை, பிப். 27- கிராம சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு கலந் தாய்வை உடனே நடத்திடக் கோரி தமிழ்நாடு கிராம சுகா தார செவிலியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர். ஆரம்ப சுகாதார  மையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்களை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைத்துத் தரவேண்டும். கர்ப்பிணி பெண்களின் பதிவை கணினி மூலம் பதிவு செய்யும் எளிமை முறையை அமல்படுத்த வேண் டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு கலந் தாய்வை ஆறு மாதத்திற்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர். உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்ற பெருந்திரள் முறையீட்டு இயக்கத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் உஷாராணி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சி. பரமேஸ்வரி, மாவட்டச் செயலாளர் பிரபாவதி ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் மாவட்டப் பொருளாளர் ஆனந்தன் வாழ்த்திப் பேசி னார். இதில் ஏராளமான கிராம சுகாதார செவிலியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர்.