உதகை, நவ.16- நீலகிரி மாவட்டத்தில் காவல் துறையினர் ஜனநாயக உரிமை களை மறுப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் வி.ஏ. பாஸ்கரன் மாவட்ட காவல் கண் காணிப்பாளருக்கு அனுப்பிய கடி தத்தில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் பொதுவான அரசியல் பிரச்சனைகளுக்காகவோ அல்லது பொதுமக்களின் கோரிக் கைகளை முன்வைத்தோ, ஜன நாயக ரீதியிலான போராட்டங் களை நடத்துவதற்கும் கூட அண்மைக்காலமாக காவல்துறை யினர் அனுமதி மறுத்து வருகின் றனர். இது ஜனநாயக உரிமைகளை மறுக்கும் செயலாகும். போராட் டங்கள் நடத்துவதற்கு அனுமதி கோரி காவல்துறையினரிடம் கடிதம் கொடுத்தால், அது குறித்து எவ்வித பரிசீலனையையும் மேற் கொள்ளாமல், போராட்டங்கள் நடைபெறும் நேரங்களில் அந்த இடத்திற்கு வரும் காவல் துறையினர், இந்த போராட்டத் திற்கு அனுமதியில்லை என சொல்லுவதும், காவல் சட்டம் 30 (2) அமலில் உள்ளதாக கூறுவதும், போராட்டங்களால் சட்டம் ஒழுங் கிற்கும், பொது அமைதிக்கும் குந்தகம் உருவாகும் என சொல்லு வதும் வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், நீலகிரி மாவட் டத்தில் 283 இடங்களில் கட்டி டங்கள் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித் துள்ளார். இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி யதற்கு, பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் அனுமதி மறுத் துள்ளனர். மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு பிரச்சனையில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பை தெரிவிப்பதற்கும், மாற்று கோரிக்கைகளை முன்வைப்ப தற்கும் கூட காவல் துறையினர் அனுமதி மறுப்பதும், தேவையற்ற கெடுபிடிகளை விதிப்பதும் பொருத் தமான செயலாகாது. எனவே, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் என்ற முறையில் தாங்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிடுவதோடு, நீலகிரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்பு களின் அறப்போராட்டங்களுக்கு உரிய அனுமதி கிடைத்திட ஆவண செய்ய வேண்டுமெனவும், சட்டம் அனுமதித்திருக்கிற ஜனநாயக உரிமைகளை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டு மெனவும் கடித்ததில் தெரிவித் துள்ளார்.