உதகை, நவ. 16 - நீலகிரி கீழ்குந்தா பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிட மக்களுக்கு அரசு வீடு கட்டித்தர வேண்டுமென அப்ப குதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம் கீழ்குந்தா பகுதியில் கடந்த 15 ஆண்டு களுக்கு முன்பு ஆதிதிராவிட மக்கள் 135 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இது வரை, அந்த இடத்தில் நான்கு பயனா ளிகள் மட்டுமே வீடு கட்டி உள்ள னர். மற்றவர்கள் வீடு கட்டுவதற்கு போதிய பண வசதி இல்லாததால் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். இந்நிலையில், தங்களுக்கு அப்பகு தியில் அரசு சார்பில் வீடு கட்டித்தர வேண்டும் எனக்கோரி பத்துக்கும் மேற்பட்டோர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.