உதகை.டிச 10 - மஞ்சூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பள் ளிக்கு சிஐடியு சங்கத்தின் சார்பில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்று. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் மாற்றுத்திற னாளிகள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உணவு உண்பதற்கு தேவையான தட்டு மற்றும் டம்ளர் ஆகிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடை பெற்றது. சிஐடியு தொழிற்சங்கத்தின் நீலகிரி மாவட்ட குழுவினால் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மஞ்சூர் காவல் ஆய்வாளர் தவுலத் மிசா கலந்து கொண்டு பொருட் களை வழங்கினார். இதன்பின்னர், பெண் கள் மற்றும் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் தொந்தரவை தடுத்திட காவலன் செயலி பயன்படுத்தும் முறையினை விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.சுந்தரம், மாவட்ட செயலாளர் ஆர்.ரமேஷ், மாவட்ட பொருளாளர் ஏ.நவீன்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ், டாஸ்மாக் ஊழியர் மாநில சம் மேளன தலைவர் ஜெ.ஆல்தொரை, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி அலியார், மின் ஊழியர் மத்திய அமைப்பின் குந்தா கோட்ட செயலாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசி ரியை கே.ஜெயந்தி நன்றி கூறினார்.