tamilnadu

img

நிலத்தடி நீர் செல்ல சரியான வடிகால் அமைப்புகள் இல்லாததே நிலச்சரிவுக்குக் காரணம் - மண் மற்றும் நீர்வள விஞ்ஞானி தகவல்

உதகை, ஆக. 9 - உதகை அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப, போதிய வடிகால் அமைப்புகள் இல்லா தது தான் நிலச்சரிவுக்கு முக்கியக் கார ணம் என மண் மற்றும் நீர் வள நிறு வன முதன்மை விஞ்ஞானி தெரிவித் துள்ளார். நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதி யில் நிலச்சரிவு ஏற்பட்டும், ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியும் வருகி றது. இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி அவலாஞ்சியில் அதிகபட்சமாக 58.1 மி.மீ கனமழை பதிவாகியது. இதனால், அப்பகுதி எமரால்டு  சத்தியா நகரில் உள்ள வருவாய் நிலத்தில் அதிக அளவி லான நிலச்சரிவு ஏற்பட்டது. இதைய டுத்து, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை இந்திய மண் மற்றும் நீர் வள நிறுவன முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, நம் காலநிலையில் கடந்த ஐந்து ஆண் டுகளில் ஏற்பட்ட மாற்றங்களால் நீர் சுழற்சி முறையில் மாற்றம் ஏற்பட்டுள் ளது.

இதனால் பருமழை பெய்வதில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந் நிலையில், அவலாஞ்சி பகுதியில் கடந்த ஆண்டை போலவே நடப்பாண் டும் அதிகபட்ச மழை பெய்துள்ளது. இதற்கு கடந்த இரு மாதங்களில் பெய்ய வேண்டிய பருவமழையின் அளவு குறைந்ததே ஆகும். மேலும், எமரால்டு பகுதியில் ரசாயனங்களால், மண்ணின் சத்து இழந்தும், நிலத்தடி நீர் செல்ல சரியான வடிகால் அமைப்புகள் இல்லா ததாலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு விவசாயம், குடியிருப்பு ஆகிய வைகளில் போதிய பாதுகாப்பு இல் லாத சூழ்நிலையை உருவாக்கும்.  இதே போன்று  வரும் ஆண்டுகளிலும், பருவமழை குறிப்பிட்ட காலத்தில் பெய்யாதபோது, அதிகமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத் தால், பேரிடர்களை தவிர்க்கலாம். இவ்வாறு மணிவண்ணன் கூறினார்.

;