tamilnadu

img

கொரோனா பரிசோதனைகளை அதிகரித்திடுக - சிபிஎம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா கண்டறிவதற்கான பரி சோதனைகளை அதிகரித்திட வேண்டும். தென்மேற்கு பருவழை துவங்க உள்ளதால் உரிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கேத்தி பாலாடா வில் கேரட் கழுவும் இயந்திர விபத்தில் பலியான நந்தினி யின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில்  மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.         இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.