tamilnadu

img

உதகையில் கிறிஸ்துவ மதபோதகர் மீது தாக்குதல் இந்து முன்னணியினர் வெறியாட்டம்

உதகை, செப்.16- உதகையில் கிறிஸ்துவ மத போதகரை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்திடக்கோரி அனைத்து கிறிஸ்துவ அமைப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட் டனர்.  உதகையில் உள்ள பாம்பே கேஸ்ட்டில் பகுதியில் கிறிஸ்தவ மத போதகரான ஜான் மற்றும் அவரின் துணைவி ஜெனிபர் ஆகி யோர் ஞாயிறன்று பொதுமக்கள் மத்தியில் பிரசுரங்களை விநியோ கம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், அந்தப் பிரசுரத்தை வாங்கி கிழித்து எறிந்துள்ளார். இதன்பின் செல்பேசி மூலம் தகவல் கொடுத்து இந்து முன்னணியைச் சேர்ந்த மேலும் பலரை வரவழைத்துள்ளார்.  இதன்பின் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் அராஜகமான முறையில், மதபோதகர் ஜானின் கையில் வைத்திருந்த அனைத்து  பிரசுரங்களை பறித்து கிழித்து  எறிந்துள்ளனர். மேலும், அவரை யும், அவரது மனைவியையும் தகாத வார்த்தைகளில் பேசி தாக்கியுள்ளனர்.  இதன்பின்னரும் ஆத்திரமடங்காத அக்கும்பல் போதகர் ஜானின் நெற்றியில் விபூதியை பூசியும், அவரது மனை வியின் நெற்றியில் விபூதியை வைக்க சொல்லியும் கட்டாயப் படுத்தியுள்ளனர்.  இவ்வாறு அராஜகமான செய லில் ஈடுபட்ட இந்து முன்னணி யினரை உடனடியாக கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில டைக்கக்கோரி பெந்தகோஸ்தே திருச்சபைகள் மாமன்றம் மற்றும் அனைத்து கிறிஸ்தவ இயக்கங் களை சேர்ந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திங்களன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன்பின் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யாவை நேரில் சந்தித்து மனு அளித்து முறையிட்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
இதற்கிடையே, இந்து முன்ன ணியினரின் இந்த வெறிச்செய லுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட செய லாளர் வி.ஏ.பாஸ்கரன் வெளியிட் டுள்ள செய்திகுறிப்பில் தெரி வித்திருப்பதாவது, மதநல்லிணக் கத்தை பேணி மக்கள் ஒற்றுமை யுடனும், அமைதியுடனும் வாழ்ந்து  வரும் நீலகிரி மாவட்டத்தில் மத வெறியை தூண்டி, மக்களை பிளவு படுத்தி இழிவான அரசியலை நடத்திட சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து காத்துக் கிடக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பான இந்து முன்னணியை சேர்ந்த சிலர் மதபோதகர் ஜான் மற்றும் அவரின் துணைவியார் ஜெனிபர் ஆகியோர் மீது தாக் குதல் நடத்தி இருப்பது கண்டனத் துக்குரியது. மத சுதந்திரத்தை பறித் திடும் வகையில் வன்முறையில் ஈடுபட்டு சமூக ஒற்றுமையை சீர் குலைப்போரை உடனே வழக்கு பதிவு செய்து கைது செய்து மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத் தையும், இதுபோன்று மதவெறி சக்திகளின் கருத்துகளுக்கு இரை யாகாமல் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டுமென மாவட்ட மக்களையும் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.