tamilnadu

img

பருவமழையால் அழுகும் பூக்கள் குன்னூர் காட்டேரி பூங்காவின் சோகம்

உதகை, டிச. 1- குன்னூரில் தொடர் மழையால் காட் டேரி பூங்காவில் மலர்கள் அழுக ஆரம் பித்துள்ளது. குன்னூரில் இருந்து மேட்டுபாளையம் செல்லும் சாலையில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப் பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் நடந்து முடிந்த இரண்டாவது சீசனில் காட்டேரி பூங்கவில் சுமார் 1 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. அதில் பல்வேறு மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வந்தது.  இந்நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் போதிய வெயில் இன்றி மேக மூட்டமாக காணப்படுகிறது. இதன் கார ணமாக பூங்காவில் உள்ள செடிகளில் மலர் கள் அழுகத் தொடங்கியுள்ளன. இதனால் அழுகிய மலர்களை செடிகளிலிருந்து அகற் றும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.