tamilnadu

img

துயரத்தில் தவிக்கும் டேன் டீ நிறுவன தொழிலாளர்கள் நிர்வாக இயக்குநரிடம் சிஐடியு முறையீடு

உதகை, செப். 9 - துயரத்தில் தவிக்கும் டேன் டீ  நிறுவன தொழிலாளர்களின் பல் வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக நிர்வாக இயக்குநரிடம் சிஐடியு சங்க  தலைவர்கள் முறையிட்டு மனு அளித்தனர். தாயகம் திரும்பிய தொழிலாளர் களுக்காக பிரத்யேகமாக உருவாக் கப்பட்ட டேன் டீ எனப்படும் தமிழ் நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்நிலை மிகவும் துயரமான நிலையில் உள்ளது. மிக நீண்ட கால மாக அவர்களின் பல்வேறு கோரிக் கைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. இத்தகைய நிலையிலுள்ள தொழி லாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு நீலகிரி எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன் சங்கத் தின் சார்பில் டேன் டீ நிர்வாக இயக்குநர் சீனிவாசரெட்டியிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. இதனை சங்கத்தின் கெள ரவ தலைவர் ஆர்.பத்ரி, தலைவர் பி.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் எஸ்.ராஜன், பன்னீர்செல்வம் ஆகி யோர் அளித்தனர். இதில் தொழிலாளர்கள் வசிக் கும் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் கழிவறை மிகவும் பழுத டைந்த நிலையில் உள்ளதால்  அவற்றை பயன்படுத்த முடி யாத நிலையில் தொழிலாளர்கள்  மிகவும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இவற்றை  உடனடியாக சீரமைத்துதர வேண் டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக  தொழிலாளர்களுக்கு வழங்கப்ப டாமல் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள மருத்துவ விடுப்பு மற்றும்  ஈட்டிய விடுப்பிற்கான ஊதிய நிலு வையை உடனடியாக வழங்க வேண்டும்.

480 நாட்கள் பணி முடித்த ஒப்பந்த ஊழியர்களை  பணி நிரந்தம் செய்ய வேண்டும்.  சேரம்பாடி  மருத்துவமனையை முழுமையாக புனரமைக்க வேண் டும். வனத்துறைக்கு ஒப்படைக்கப் பட்டுள்ள 270 ஹெக்டேர் பகுதி யில் வளர்ந்துள்ள தேயிலையை பறித்து விற்பனை செய்ய உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். டேன் டீ பகுதிகளில் சாலைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கேசுவல் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான பணி வழங்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டி ருந்தன. இம்மனுவை பெற்றுக் கொண்ட நிர்வாக இயக்குநர், “ டேன் டீ நிறு வனத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் கழிப்பறை ஆகியவற்றை முழுமையாக புனரமைப்பதற்காக சிறப்பு பகுதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி கோரப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நிதி  பெறுவதற்கான பணிகள் நடைபெ றுகின்றன. விரைவில் அந்த நிதியை பெற்று அனைத்து வீடுகளும், கழிப் பறைகளும் முழுமையாக சீர் செய் யப்படும்.  மேலும், சேரம்பாடி மருத்துவம னையை சுகாதாரத் துறையிடம் ஒப்படைப்பதற்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்து விட்டன. அண்மையில் சென்னையில் இருந்து சுகாதாரத் துறையின் இணை இயக்குநரும் வந்து பார்வை யிட்டு சென்றுள்ளார். விரைவில் அம்மருத்துவமனையின் கட்ட மைப்பு மேம்படுத்தப்பட்டு தொழி லாளர்கள் மற்றும் பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப் படும். தொழிலாளர்களுக்கு நிலு வையில் உள்ள தொகை அனைத் தையும் படிப்படியாக வழங்குவ தற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகின்றன. அவை வழங் கப்படும். 480 நாட்கள் பணிமுடித்த அனைத்து தொழிலாளர்களும் அவ் வப்போது காலதாமதமின்றி பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார்.