உதகை,மார்ச் 2- பெண்களுக்கான சட்டம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட சமூகநலத்துறை ஆகியவை இணைந்து நடத்திய பெண்க ளுக்கான சட்டம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது. காப்பி ஹவுஸ் சந்திப்பு முன்பு ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி, மலைப் பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் கெச்சி லீமா மாலினி உள்ளிட்ட ஏராளமான கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.