tamilnadu

img

இந்நாள் நவம்பர் 24 இதற்கு முன்னால்

1832 - அமெரிக்கக் கூட்டரசின் வரிவிதிப்புச் சட்டங்களான 1828, 1832இன் டாரிஃப்கள் தங்கள் நாட்டை (மாநிலத்தைத்தான்!) கட்டுப்படுத்தாது என்று அறிவிக்க, ‘செல்லாத தாக்கும் அவசரச்சட்டத்தை’ தெற்கு கரோலினா மாநிலம் இயற்றி யதையடுத்து, அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் ‘செல்லாத தாக்கும் சிக்கல்’ தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே யிருந்த நெப்போலியப் போர்களின்போது, ஐரோப்பியக் கண்டத்திற்கு வணிகக் கப்பல்களைச் செல்லவிடாத முற்றுகைகள் நிலவின. இதனால், அங்கு ஏற்றுமதிகள் எதுவும் செல்ல இயலாத நிலையில், இங்கிலாந்து வியாபாரிகள் தங்கள் பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தனர். அவ்வாறான குறைந்த விலை என்பது, அமெரிக்காவில் உற்பத்தி செய்வதை விடக் குறைவானதாக இருந்ததால், ‘பாதுகாப்புவாத வரிவிதிப்பு’ முதன்முதலில் அமெரிக்கப் பாராளுமன்றத்தால் 1816இல் அறி விக்கப்பட்டது. (பாதுகாப்புவாதம் என்பது, இறக்குமதிகளால் உள்நாட்டுத் தொழில்கள் பாதிக்காமலிருக்க, இறக்குமதிப் பொருட்களுக்கு மிக அதிக வரிகள் விதிப்பதாகும். இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துவதாக, வரலாற்று அனுபவங்களிலிருந்து பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடு கின்றனர்.) 1816இல் விதிக்கப்பட்ட இவ்வரிகள் 1824, 1828, 

1832 சட்டங்களில் கடுமையாக உயர்த்தப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட சில பொருட்களுக்கு 38 சதவீதம் வரையும், சில மூலப்பொருட்களுக்கு 45 சதவீதம்வரையும்கூட வரிகள் விதிக்கப்பட்டன. இது கூட்டரசின் வரி வருவாயை உயர்த்தவில்லை யென்பதுடன், பெரும்பாலும் விவசாய மாநிலங்களாக இருந்த தென் மாநிலங்கள், பிற பொருட்களுக்கு இறக்குமதியை நம்பி யிருந்த நிலையில், கடும் நெருக்கடியைச் சந்தித்தன. இந்த நெருக்கடி களால் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளையர்கள், தங்கள் அடிமைகளுடன் தங்கள் மாநிலத்தைவிட்டு வெளியேறியதால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தெற்கு கரோலினா, அமெரிக்காவின் வரி விதிப்புச் சட்டம் தங்கள் நாட்டின்(!) எல்லைக்குள் செல்லாது என்று சட்டமியற்றிது. கூட்டரசின் (அமெரிக்க!) ராணுவத்தை அனுப்பி, வரிவிதிப்பை நடைமுறைப்படுத்துவோம் என்று குடியரசுத்தலைவர் ஆண்ட்ரூ ஜாக்சன் எச்சரித்ததையடுத்து, வரிவிதிப்பை மறு பரிசீலனை செய்வதை ஏற்று, அவசரச்சட்டத்தை தெற்கு கரோலினா ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து 1833இல் இயற்றப்பட்ட வரி விதிப்புச் சட்டம், விட்டுக்கொடுத்தல் சட்டம் என்றே குறிப்பிடப்படு கிறது. மாநிலங்களாக இன்றி நாடுகளின் கூட்டமைப்பாக உரு வானதால், மாநிலங்கள் தனித்தனிச் சட்டங்களைக் கொண்டிருக்கிற அமெரிக்காவில், வேறு பல பிரச்சினைகளின்போதும் இவ்வாறு கூட்டரசின் சட்டத்தை மாநிலங்கள் ஏற்காத நிலை யேற்பட்டிருந்தாலும், அமெரிக்க உச்ச நீதிமன்றம் எல்லாச் சூழல்களி லும் அதைத் தவறு என்றே தீர்ப்பளித்துள்ளது.

- அறிவுக்கடல்