tamilnadu

img

இந்நாள் டிச. 19 இதற்கு முன்னால்

1927 - கக்கோரி சதி என்று குறிப்பி டப்படும் கக்கோரி ரயில் கொள்ளை யில் ஈடுபட்டதற்காக, இந்துஸ்தான் ரிப்பப்ளிக் கன் அசோசியேஷன் (எச்ஆர்ஏ) அமைப்பின் ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபகுல்லா கான், ராஜேந்திரநாத் லகிரி, தாக்கூர் ரோஷன் சிங் ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். 1920 ஆகஸ்ட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார் காந்தி. 1922 பிப்ரவரி யில், அமைதியாகப் போராடிக்கொண்டிருந்த சிலரை சவுரி சவுரா காவல்துறையினர் கொன்றதில் சினமுற்ற மக்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, அங்கிருந்த 22 காவல்துறையினரை உயிருடன் எரித்துவிட்டனர். இந்த உண்மைகளை அறியா மலேயே, வன்முறைகளால் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்துவதாக காந்தி அறிவித்தது, போராடிக் கொண்டிருந்தவர்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இது காங்கிரசையும் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று பிளவடையச் செய்த நிலையில், சினமுற்றிருந்த இளைஞர்களைத் திரட்டிப் போராடுவதற்காக, பிஸ்மில் முன்முயற்சியில்,  இந்த எச்ஆர்ஏ அமைப்பு 1923இல் தொடங்கப்பட்டது.

நிதித் தேவைகளுக்கு ஆங்கிலேய அரசிடமே கொள்ளையடிப்பது என்று முடிவு செய்து, 1923இல் கல்கத்தா அஞ்சல் நிலையம், சிட்டகாங் ரயில்நிலையம் ஆகியவற்றில் கொள்ளையடிக்கப்பட்டது. எச்ஆர்ஏவின் கொள்கைகள் புரட்சிக்காரன் என்ற தலைப்பில் அச்சிடப்பட்டு, 1924இல் விநியோகிக்கப்பட, 1924-25 காலத்தில் பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், சுக்தேவ் தாப்பர் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் இந்த அமைப்பில் இணைந்தனர். ஆயுதப் போராட்டத்தை நோக்கமாகக்கொண்டிருந்த அமைப்பு என்பதால் நிதித்தேவைகள் தொடர, 1925 ஆகஸ்ட் 9இல், ஆங்கிலேய அரசின் பணப்பைகள் கொண்டுசெல்லப்பட்ட ரயிலில், லக்னோவுக்கு அருகிலுள்ள, கக்கோரி என்ற இடத்தில் கொள்ளையிட்டனர். இந்நிகழ்வின்போது, எதிர்பாராதவிதமாக பயணி ஒருவர் குண்டுபாய்ந்து இறந்ததால், கொலை வழக்காக மாற்றிய ஆங்கிலேயே அரசு, இந்தியா முழுவதும் மனித வேட்டையாடி, சுமார் 40 பேரைக் கைது செய்தது. விசாரணையில், இந்த நால்வருக்கும் மரணதண்டனையும், மற்றும் இருவரை அந்தமான் சிறைக்கு அனுப்பவும், இன்னும் 11 பேருக்கு 4இலிருந்து 14 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. நிறுவியவர்களில் சந்திரசேகர் ஆசாத் மட்டுமே கைதாகாமல் தப்பியிருந்த நிலையில், பகத்சிங் முயற்சியில், 1928 ஆகஸ்ட்டில் தில்லியில்கூடி, இந்த அமைப்பே இந்துஸ்தான் சோஷலிட் ரிப்பப்ளிக்கன் அசோசியேஷன்(எச்எஸ்ஆர்ஏ) ஆக புதுப்பிக்கப்பட்டு, போராட்டங்களில் ஈடுபட்டது!

- அறிவுக்கடல்