tamilnadu

img

தாய்லாந்து மொழியில் திருக்குறள் வெளியீடு

பாங்காக்,நவ.2- இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கிற்குச் சென்றுள்ள  பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தாய் லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் ஞாயிறன்று நடைபெறு கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3-வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடை பெறுகிறது.  இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார்.  பாங்காக் தேசிய உள் விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ,  தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும், குருநானக்கின் 550-வது பிறந்த நாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றை யும் வெளியிட்டார்.

;