tamilnadu

img

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -18 பேர் பலி

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலநடுக்கம் 15 கி.மீட்டர்கள் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன. முதலில் 4 பேர் பலி என தகவல் வெளியானது.  இதன்பின் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் நிலநடுக்கத்தை தொடர்ந்து 35 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக துருக்கி பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது
 

;