tamilnadu

img

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது....

தில்லி
உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை நினைக்க முடியாத அளவுக்கு புரட்டியெடுத்திருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 60,000-க்கும் அதிகமான பாதிப்பு, 25 ஆயிரத்துக்கும் அதிகமான பலி எண்ணிக்கை என உலகையே உள்ளங்கையில் வைத்து மிரட்டி வருகிறது இந்த கொரோனா வைரஸ். 

தற்போதைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் 28 லட்சத்து 33 ஆயிரம் பேர்  கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 97 ஆயிரம் பேரை கொரோனா காவு வாங்கியுள்ளது. இத்தகைய அதிர்ச்சிக்குள்ளான செய்திக்கு மத்தியில் ஆறுதல் அளிக்கும் ஒரே செய்தி, உலகில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனவை வென்றுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்கா (1.10 லட்சம்), ஜெர்மனி (1.9 லட்சம்), ஸ்பெயின் (92 ஆயிரம்),  சீனா (77 ஆயிரம்) போன்ற அதிகளவில் கொரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பியுள்ளன. எனினும் குறைந்த பாதிப்பு விகிதத்தில் அதிக நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பியுள்ள பெருமை சீனாவுக்கு தான் சேரும்.   
 

;