tamilnadu

img

கொரோனா வைரஸ்.... அமெரிக்காவில் மேலும் 1,100 பேர் பலி... 

நியூயார்க் 
உலக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை மையம் கொண்டு அங்குப் பலத்த சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்வதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி நகரைச் சேர்ந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 87 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். எனினும் கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரம் அமெரிக்காவில் குணமடைந்துள்ளனர். 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
 

;