tamilnadu

img

வங்கதேச எழுத்தாளருக்கு இந்தியாவில் தங்க விசா காலம் நீட்டிப்பு

புதுதில்லி,ஜூலை 21- இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மிரட்டலுக்கு உள்ளாகி, இந்தியாவில் தங்கியுள்ள வங்கதேச நாட்டின் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் இந்திய விசாவை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய ‘லஜ்ஜா’ என்ற  புத்தகம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவர்களது மிரட்டலின் காரணமாக அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, தற்போது ஸ்வீடன் நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். தொடர் மிரட்டலின் காரணமாக அவர் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இந்திய விசா பெற்று இங்குதான் தங்கியுள்ளார். தற்போது கொல்கத்தாவில் தங்கியுள்ளார். அவரது விசா காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய  உள்ள நிலையில், அவரது விசா காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஞாயிறன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.