tamilnadu

img

மலை உச்சியிலிருந்து கீழே விழுந்த கனடா சுற்றுலா பயணி

கனடா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், பாராசூட் சரியாக இயங்காததால் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அமைந்துள்ள கிளிமாஞ்சாரோ மலைப்பகுதி முன்னணி சுற்றுலா தலமாக விளங்கிவரும் நிலையில் உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து மலையேறுவதும், பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபடுவதும் வழக்கம். இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் கைலோ (51 வயது) என்ற சுற்றுலா பயணி, மலை உச்சியில் பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபட்டபோது தரையிறக்கும் முயற்சியாக  தான் அணிந்திருந்த பாராசூட்டை சரியாக இயங்காததால், சுமார் 20 ஆயிரம் அடி உயரமுள்ள மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.