தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசாமில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத் தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 பேராக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செவ்வாயன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளி களாக பதிவானது.
தமிழகத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் வந்து பணியாற்றுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டிருக்கிறது.
சினிமா படப்பிடிப்புகளை தொடங்கவும், தியேட்டர்களை திறக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்வது தெரிந்தால், விவசாயிகள் புகார் அளிக்கலாம் என்று திருச்சி விதை ஆய்வுத் துறை துணை இயக்குநர் சரவணன் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறை 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்திக்கும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வி. கே. யாதவ் தெரிவித் துள்ளார்.
ஒவ்வொரு அரசு ஊழியரும் சொந்த ஊரில் பணி செய்ய அனுமதிக்கக் கோரும்பட்சத்தில், அரசு இயந்திரம் செயல் படாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.