tamilnadu

img

துபாய் பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி

துபாயில் நேற்று நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஓமன் நாட்டு தலைநகரமான மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணித்த பேருந்து, துபாய் அருகே ராஷியா என்ற பகுதியில் வந்தபோது, திடீரென விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் ராஜகோபாலன், ஃபெரோஸ் கான் பதான், தீபக் குமார், ஜமாலுதின் அரக்கவெட்டில், கிரன் ஜானி, வாசுதேவ் மற்றும் திலக்ராம் ஜவகர் தகூர் ஆகிய  8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று துபாயில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

;