tamilnadu

img

பெண் தெய்வ வழிபாடும்’ நூல் வெளியீட்டு விழா

வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் எழுதி, சந்தியா பதிப்பகம் பதிப்பித்துள்ள ‘பெருந்தெய்வ வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும்’ நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று (நவ.3) சென்னையில் நடைபெற்றது. இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலை ‘முகம்’ இதழ் சிறப்பாசிரியர் முனைவர் இளமாறன் வெளியிட, மணிமேகலை சிவராமன் பெற்றுக்கொண்டார். முனைவர் இராம.குருநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் ஜி.செல்வா நூலை திறனாய்வு செய்து பேசினார். நூலாசிரியர் ச.செந்தில்நாதன் ஏற்புரையாற்றினார். இலக்கிய வட்டச் செயலாளர் பெ.கி.பிரபாகரன், பொருளாளர் ஆ.ஜெகதீசன், முனைவர் ஜெ.முத்துச்செல்வன், ‘முகம்’ மாமணி உள்ளிட்டோர் பேசினர்.

;