மன்னார்குடி, அக்.8- திருவாரூர் மாவட்ட பொறியாளர் கழகக் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பொறியாளர்கள் சுயதொழில் செய்யும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட தலைவராக மின் பொறியாளர் சம்பத், கட்டிட பொறியாளர் முருகேசன் பொதுச் செயலாளராகவும், எந்திர பொறியாளர் பாலாஜி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்துறைகளில் பணியாற்றும் பொறியாளர்க ளின் உரிமைகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பினை உருவாக்க நடவடிக்கை எடுக்க வே ண்டும். பொறியாளர் திறனை மேம்படுத்தவும், பொறியியல் பட்டய மற்றும் பட்டப்படிப்பின் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் அமைப்புச் செயலாளர் சங்கர் குமார் நன்றி கூறினார்.