tamilnadu

img

வேலூர் தொகுதியில் நாளை தேர்தல்

வேலூர், ஆக.3 வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.  வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 5 அன்று நடைபெறு கிறது. தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் களத்தில் உள்ளனர்.  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டி வீதியில் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் தலைமையில் சனிக்கிழமை (ஆக. 3) பிரச்சார நிறைவுபொதுக்கூட்டம் நடை பெற்றது. வேலூர் எம்எல்ஏ கார்த்தி கேயன் வரவேற்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி, மதி முக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் எம்.பி., மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விசிக தலை வர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஆகி யோர் பேசினர்.