பள்ளிப்பாளையம் அருகே சார்ஜ் செய்தபடியே செல்போனை பயன்படுத்தியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் தேவேந்திரன். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் டவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று மதியம் தேவேந்திரன் தனது வீட்டில் செல்போனை சார்ஜர் செய்தபடியே அதை பார்த்துக்கொண்டும் இருந்தார். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.