tamilnadu

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், மே 14-அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தேடல் தன்னார்வ அமைப்பின் சார்பில் மாணவ, மாணவியரை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில், அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணி திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதியில் இருந்து தொடங்கி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது. பேரணியில் அரசுப் பள்ளியில் படிக்க வைப்போம், கல்வி எங்களது பிறப்புரிமை, வேலைவாய்ப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.அரசுப் பள்ளிகளின் தரம் குறித்தும், அரசு வழங்கும் உதவிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தப் பேரணியில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

;