tamilnadu

நாமக்கல்லில் ஆணவ கொலையை தடுக்க தனிப்பிரிவு

 நாமக்கல், ஆக.4- நாமக்கல் மாவட்டத்தில் ஆணவக் கொலையை தடுக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அருளரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் கலப்பு திருமணம் செய்து கொள்வோரின் பிரச்சனைகளை கையாளுவதற்கும், ஆணவக் கொலையை தடுக்கவும் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கூடு தல் காவல் துறை கண்காணிப்பாளர் முத்துசாமி தலைமை யில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர் பான புகார்கள் மற்றும் உதவிக்கு 04286-280700 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.