tamilnadu

img

ஒப்பந்த மின் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக - சிஐடியு ஆர்ப்பாட்டம்

நாமக்கல், பிப். 19- ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி கோட்ட செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார். நாமக்கல் கோட்டை செயலாளர் சௌந்தரராஜன் திருச்செங்கோடு கோட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். திட்ட பொருளாளர் காமெடி கேசன் சிறப்புரையாற்றினார். மின்வாரிய ஓய்வு பெற்ற நல அமைப்பின் தலைவர் காளியப்பன் வாழ்த்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிறைவாக மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி பி.கண்னன் நன்றி கூறினார்.