நாமக்கல், மே 28-ராசிபுரம் அருகே குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளகின்றனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம், கள்ளுபாளையம், பாலபாளையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் விசைத்தறி தொழில், விவசாயக்கூலித் தொழில் செய்துவாழ்ந்து வருகின்றார். இப்பகுதியில் சமீபகாலமாக குடிநீர் பற்றாக்குறையால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ராசிபுரம்- திருச்செங்கோடு பிரதான சாலையில் பாலபாளையத்தில் சிறிய மினி டேங்க் ஒன்று உள்ளது. இதில் குடிநீர் வருவதற்கு முதல் நாளிலே வரிசையாக குடங்களை வைத்து நீண்ட நேரம் காத்திருந்து குடிநீர் பிடித்து வருகின்றனர்.இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்ல கூடிய தொழிலாளர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், குடிநீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கும், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனுஅளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பவில்லை. ஆகவே உடனடியாக இப்பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சனைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.