நாமக்கல், அக்.25- நாமக்கல் நகராட்சியில் கொசுப்புழு உற்பத்தி யாகும் வகையில், வளா கத்தில் மழைநீர் தேங்கி இருந்த 2 தனியார் பள்ளி களுக்கு ரூ.40 ஆயிரம் அப ராதம் நகராட்சி அதிகாரி கள் விதித்தனர். நாமக்கல் மாவட்டத் தில் டெங்கு காய்ச்சல் பர வாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கொசுப்புழு உற்பத்தியாகாத வகையில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வந் தனர். இந்நிலையில் புதனன்று நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நக ராட்சி ஆணையாளர் சுதா தலைமையில் சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் சுகா தார ஆய்வாளர்கள் தனியார் பள்ளிகள், லாரி பட்டறைகள், அரசு போக்குவரத்து பணிமனை உள்ளிட்ட இடங்களில் கொசுப் புழு உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்கி உள்ளதா? என ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது 2 தனியார் பள்ளி வளாகங்களில் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்கி நிற்பது தெரியவந்தது. இதையடுத்து ஒரு பள்ளிக்கு ரூ.30 ஆயிரம், மற்றொரு பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் 20 லாரி பட்டறைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி இருந்த நிறுவ னங்களுக்கு மொத்தமாக ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.