நாமக்கல், அக்.19- வெப்படை பகுதியில் தேங்கிய குப்பைகளை வாலிபர் சங்க முயற்சியால் ஊராட்சி நிர்வாகம் அகற்றி உள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளி பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட வெப்படை பேருந்து நிறுத்தம் அருகில் கடை வீதிகளில் இருந்து வெளி யேற்றப்படும் குப்பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழிகள் மலைபோல் குவிந்துள்ளது. இதனை அகற்று மாறு அதிகாரிகள் கவனத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எலந்தகுட்டை ஊராட்சி நிர்வா கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவி ல்லை. இதையடுத்து பாதையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுமாறு வாலிபர் சங்கம் சார்பில் கண்டன பேனர் வைக்கப்பட்டது. இதன்பின் எலந்த குட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் மூலம் குப்பைகளை அகற்றப்பட்டு, சுத்தம் செய்தனர். இப்பணியை மேற்கொண்ட வாலிபர் சங்கத்தினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.