tamilnadu

பெட்ரோல் விற்பனை நிலையத்தை நிர்வகிக்க அழைப்பு

நாமக்கல், மார்ச் 12- முன்னாள் படை வீரர்கள் பெட்ரோல் விற்பனை நிலை யத்தை  நிர்வகிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டத்தில் சேலம் செல்லும் பிரதான  சாலையில் உள்ள நவணி கிராமத்தில் பாரத் பெட்ரோலியம்  நிறுவனத்தின் கட்டுபாட்டின்கீழ் வாகன எரிபொருள்  சில்லரை விற்பனை நிலையத்தை நிர்வகித்திட 60  வயது வரையுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர் களை (jco) ரூ.20 லட்சம் மதிப்புள்ள வங்கி உத்தர வாதம் மற்றும் வேலை ஆட்களை நிர்வகிக்க www.bharatpetroleum.in. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.  இதில் விருப்பமும், தகுதியும் உள்ள நாமக்கல் மாவட் டத்தை சார்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலு வலகத்தினை நேரில் அணுகி தகவல் தெரிந்து கொள்ளு மாறு மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.