நாமக்கல், ஜூலை 15- இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், அலமேடு காளியம்மாள் லைன் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் சுமார் 20 ஆண்டு காலமாக வாடகை வீட்டில் வசித்து வரு கின்றனர். இந்நிலையில் சொந்த வீடு நிலம் இல்லாத விசைத்தறி தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் 18 குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதேபோல், சேந்தமங்கலம் வட்டம், சியாம் பாளையம் ஊராட்சி கொண்டம்பட்டிமேடு பகுதி யில் கல்லுடைக்கும் தொழில்களில் ஈடுபட்டு வரும் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இதில் 15 குடும்பங்களுக்கு வீட்டு மனை நிலம் இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ஆகவே இலவச வீட்டு மனை நிலம் வழங்க வேண் டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.