நாகர்கோவில், டிச.24- சென்னை, அண்ணாசாலை பல்லவன் இல்ல மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்வில், அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 10 விரைவு பேருந்துகளின் பயணத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த 10 பேருந்துகளும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள் மற்றும் பெங்களூர் மாநகரத்திற்கு செல்லும் வழித்தட பேருந்துகளாக தேர்வு செய்யப்பட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.